இன்றைய தினம் மின்வெட்டு அமுலாகும் நேர விபரங்கள் தொடர்பிலான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (மார்ச்-04) வெள்ளிக் கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
நாட்டில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 5 மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றையதினம் (04) நாட்டை 10 வலயங்களாக (E, F, | P, Q, R, S, T, U, V, W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மொத்தமாக 7 மணித்தியாலங்கள 30 நிமிடங்கள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய
- மு.ப. 8.00 - பி.ப. 1.00 மணி வரை
- பி.ப. 1.00 - பி.ப. 6.00 மணி வரை
முதல் கட்டத்தில் 5 மணித்தியாலங்களும்
- பி.ப. 6.00 - பி.ப. 8.30 மணி வரை - பி.ப. 8.30 - பி.ப. 11.00 மணி வரை
இரண்டாம் கட்டத்தில் 2½ மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.